search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை: டிரைவர் கைது
    X

    ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை: டிரைவர் கைது

    • பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர்.
    • ராமு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 22-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது திருவேற்காடு செல்லியம்மன் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வரும் 2 மனைவிகளின் கணவரான நந்தகுமார் (53) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    மேலும் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி அங்கு எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு பின்னர் மாணவி வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் மாணவியிடம் விசாரணை செய்தபோது டிரைவர் நந்தகுமார் வார்த்தை கூறி அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. தற்போது அவர் மீண்டும் மாணவியை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த நந்தகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நந்தக்குமாருக்கு 2 மனைவிகளும், 4 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பட்டாபிராமில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரான ராமுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×