search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி: பகுதிநேர வேலையில் அதிக கமிஷன் தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.26 லட்சம் பறித்த மர்ம நபர்கள்
    X

    ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி: பகுதிநேர வேலையில் அதிக கமிஷன் தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.26 லட்சம் பறித்த மர்ம நபர்கள்

    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது35). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு டெலிகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் குறுத்தகவல் அனுப்பி இருந்தார்.

    அதில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால், அதிக கமிஷன் பணம் தருவதாக வந்தது.

    இதனை நம்பிய தமிழரசன் மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்டு வேலை தருமாறு கேட்டார்.

    ஆனால், அந்த மர்ம நபரை சமூக வலைத்தளத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தமிழரசன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூரில் உள்ள கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீக் (22) என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வந்த குறுத்தகவலை நம்பி அதிக கமிஷனுக்கு மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த நபரின் செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

    இதேபோன்று பெத்தமேலுபள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த சவீன் என்பவர் தனது செல்போனில் வந்த மெசேஜை நம்பி மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.14லட்சத்து 24 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இந்த தொடர் மோசடிகளை குறித்து ஸ்ரீக் மற்றும் சவீன் ஆகியோர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மூலம் தொடரும் பணமோசடி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×