என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடம்பாக்கம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்தது.
- கோடம்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
போரூர்:
கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் 12-ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியும் உள்ளது.
இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து கோடம்பாக்கம் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






