என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,219 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இன்று முதல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 705 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் அணையின் மேல் பகுதியை கண்டுகளிக்க காலை முதலே சுற்றுலாப் பணிகள் குவிய தொடங்கி விட்டனர். குடும்ப குடும்பமாக வந்து அணையில் ரம்மியமான காட்சிகளை தங்களது செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர்.
அணையின் கீழ் பகுதி உள்ள பூங்காவில் இன்று காலை முதலே பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அணையின் கீழ் பகுதியில் மீன்கள் விற்பனையும் இன்று ஜோராக நடந்தது.
இதேபோல் கடந்த சில நாட்களாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை எட்டி உள்ளது. இதனால் இன்று காலை வரட்டுபள்ளம் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்