search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவராக அமிர்தகுமார் தேர்வு
    X

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவராக அமிர்தகுமார் தேர்வு

    • தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமிர்தகுமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • மயிலாடுதுறையை சேர்ந்த இவர் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக இரா.சண்முகராஜன் பணி ஓய்வு பெற்றதையொட்டி புதிய மாநிலத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாநில தேர்தல் அலுவலர் அருணகிரிநாதன், துணைத்தேர்தல் அலுவலர்கள் கார்த்திகேயன், முத்து ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் திருவல்லிக்கேணி சிவ.இளங்கோ இல்லத்தில் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமிர்தகுமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர் குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமிர்தகுமாருக்கு சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×