search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    • மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள நல்லபாடி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த மாணவிக்கும், பர்கூர் அடுத்த மூலமகுடு பகுதியை சேர்ந்த சிவா (வயது26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சிவா ஆசை வார்த்தை கூறி மாணவிஏமாற்றப்பட்டு தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாணவியை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய சிவாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×