search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் அரசு டாக்டர் வீட்டில் 7 ½ பவுன் நகை கொள்ளை
    X

    தூத்துக்குடியில் அரசு டாக்டர் வீட்டில் 7 ½ பவுன் நகை கொள்ளை

    • வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அமுதன். (வயது 40). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வேலை நிமித்தமாக குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை அவரது கார் டிரைவர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து அமுதனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், சண்முகம், தனிப்பிரிவு காவலர்கள் பொன்பாண்டியன், கலைவாணர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×