search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய 6 பேர் கைது
    X
    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புளியங்குடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய 6 பேர் கைது

    • புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புளியங்குடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புளியங்குடி ஊருக்கு மேற்கே தம்பிரான்குளம் பகுதியில் 10 பேர் கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலம் போட்டு கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம், காவலர்கள் முகமது கனி, சக்தி, முருகேசன், பால்ராஜ், தர்மராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 10 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அதில் 4 பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாசு தேவநல்லூர் உள்ளார் பகுதியை சேர்ந்த காசிதுரை(வயது 22), புளியங்குடி அருகே சுண்டங்காட்டை சேர்ந்த மருது பாண்டி(24), கிருபாகரன்(28), விக்னேஷ்(20), ராஜேஷ்(22), திருப்பதி(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 2 அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மருது பாண்டியின் சகோதரர் இளங்கோவன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×