என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர்களிடம் பணத்திற்கு பதில் தக்காளி பையை பறித்து சென்ற 2 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.
- ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). இவர் மொடக்குபட்டி-தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் விற்பனையாளர் சரவணன் என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
இவர்களது வாகனம் தளி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த கார் ஜெயப்பிரகாஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்தக்காரில் வந்த முககவசம் அணிந்த மர்ம ஆசாமிகள் மது விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன் , மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது28), மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தை சேர்ந்த வீரமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்