search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  மயங்கி கிடந்த  வாலிபர் திடீர் சாவு
    X

    கடலூர் அருகே மயங்கி கிடந்த வாலிபர் திடீர் சாவு

    • குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் வண்டி குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). கூலி தொழிலாளி. நேற்று ராஜீவ் காந்தி தனது உறவினரிடம் குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் மயங்கி கீழே கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×