search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை
    X

    நாங்குநேரி அருகே சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை தற்கொலை

    • விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் பாண்டி மயங்கி கிடந்தார்.
    • 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி உருண்டைகல் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 79). இவர் இன்று அதிகாலை அவரது வீட்டில் முன்புள்ள திண்ணையில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    தற்கொலை

    அதனை அந்த வழியாக அந்த அவரது சகோதரர் பார்த்து அவரை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாண்டி சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட பாண்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் நம்பிராஜன் நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    Next Story
    ×