என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து 'திடீர்' சாவு
- பாவூர்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
- மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்.
நெல்லை:
கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் ( வயது 57).
இவர் வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மேலும் மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்.
இவர் தற்போது பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாவூர் சத்திரம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
நெஞ்சுவலி காரணமாக ஜெயசங்கர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






