search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • விடுதிகளில் மாணவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் கீழ் இயங்கும் 27 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 பள்ளி மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 35 பள்ளி மாணவ- மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியு டனோ விண்ணப்பிக்கலாம்.

    பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வருகிற 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×