என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
    X

    கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி பேசிய காட்சி.

    மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

    • கட்டாரங்குளத்தில் தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி தெருமுனை கூட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி ஏற்பாட்டில் மானூர் அருகே கட்டாரங்குளத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஆ.க. மணி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பான சாதனை விளக்க துண்டு பிரசுரம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார் சிறப்புரை யாற்றினார்.

    கூட்டத்தில் வட்ட செய லாளர்கள் பத்மராஜ், ஆவின் கல்யாணி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் நெல்லை ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் மிக்கேல், விவசாய அணி தலைவர் போத்தி கண்ணு, வேதநாயகம், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் அனிதா, துணை அமைப்பாளர் தேவிகா, மகளிர் அணி நிர்வாகிகள் ஜெனி, அருணாச்சலம், தகவல் தொ ழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபா அருள்மணி, எம ராஜன், மாணவரணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆறுமுகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×