search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக தெருமுனை பிரசாரம்
    X

    தெருமுனை பிரசாரத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் பேசிய காட்சி.


    சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக தெருமுனை பிரசாரம்

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப்பெற கோரியும், தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • சிவகிரி விவசாய கூட்டுறவு சங்க இயக்குநர் விநாயகர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினர்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு சிவகிரி நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், ஓ.பி.சி. பிரிவு, மகளிர் காங்கிரஸ், வர்த்தக காங்கிரஸ் ஆகியவை சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் என்ற திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப்பெற கோரியும், தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். நகர தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் குருசாமிப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் நம்பிராஜன், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி விவசாய கூட்டுறவு சங்க இயக்குநர் விநாயகர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத்தலைவர் சங்கை கணேசன், புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேந்திரன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் மணி, சங்கரன்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்துரை (வடக்கு), அய்யாத்துரை (தெற்கு) மற்றும் நகர தலைவர்கள் வாசுதேவநல்லூர் செல்வராஜ்,

    ராயகிரி காளியப்பன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், நகர முன்னாள் தலைவர் மஞ்சுநாத், பொதுச்செயலாளர் தங்கப்பாண்டியன் வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர் ராஜ்குமார், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உலகேஸ்வரி, கணேசன், கலா என்ற கல்யாணசுந்தரி முத்து அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×