search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் ரோட்டில் திரிந்த கால்நடைகள்:
    X

    மேட்டுப்பாளையத்தில் ரோட்டில் திரிந்த கால்நடைகள்:

    • நகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்
    • பஸ் நிலையம் அருகே கட்டி வைத்து உரிமையாளரை வரவழைத்து அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது.

    சமீப காலமாக அன்னூர், கோவை, சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் ஆடு,மாடு மற்றும் இதர கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

    இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், ஆணையர் அமுதா உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கால்ந டைகளை வளர்க்க வே ண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நகராட்சியின் எச்சரிக்கை யினையும் மீறி கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வந்தன.

    இதனை யடுத்து இன்று காலை முதல் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில் போக்கு வரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு பஸ் நிலையம் பின்புறமுள்ள உள்ள நீருந்து நிலையத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டு பின்னர் அதன் உரிமை யாளர்கள் வரவழை க்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

    Next Story
    ×