மாநில அளவிலான நீச்சல் போட்டி சேலம் மாணவி 3 தங்கம் வென்று புதிய சாதனை

ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.
3 தங்கம் வென்ற மாணவி ரிதன்யாஸ்ரீ.
3 தங்கம் வென்ற மாணவி ரிதன்யாஸ்ரீ.
Published on

சேலம்:

சேலம் சின்னதிருப்பதி கோகுல்நகர் முதல்தெருவை சேர்ந்த வினோத் குமார்-காயத்திரிதேவி தம்பதியரின் மூத்த மகள் ரிதன்யாஸ்ரீ (வயது15). இவர் கிச்சிப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

இதில் மதுரை, சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், கள்ளக்குறிச்சி,கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 பள்ளிகளை சேர்ந்தமாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ரிதன்யா ஸ்ரீ 19 வயதுக்கு உட்பட்டோர்பிரிவில் 3 பிரிவுகளில் பங்கேற்றார். பிரஸ்டு ஸ்ட்ரோக் 100 மீட்டர் பிரிவை 1.45 நிமிடத்தில் கடந்தார். 200 மீட்டரை, 4 நிமிடத்திலும், ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில், 400 மீட்டரை, 7.9 நிமிடத் திலும் கடந்து 3 பிரிவிலும் முதல் பரிசாக தங்கப் பதக்கம் வென்றார்.

ரிதன்யா ஸ்ரீ பதக்கம் வென்றதன் மூலம் செப்டம்பர் மாதம் பெங்களூரு ராகுல் டிராவிட் அகாடமியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் நீச்சல் போட்டியில் இதுவரை, 23 தங்கப்பதக்கம்,7 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பயிற்சியாளர் தம்பிரீஸ் கான் மற்றும் சக மாணவியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com