search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்

    • பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும்.
    • மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வறிவிப்பின்படி 2022ஆம் ஆண்டு செப்ட ம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டியும், செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டியும் அனை த்து மாவட்டங்க ளிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்க ளுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்க ப்பெற தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில்பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி 15-9-2022 அன்று வியாழக்கிழமையும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 17-9-2022 அன்று சனிக்கிழமையும் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்த னியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

    இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்படும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. பள்ளிப் போட்டியானது காலை 9.30 மணிக்குத் தொடங்கப்படும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×