என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் பகுதி பெருமாள் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
- ஆஞ்சநேயருக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
- ஆஞ்சநேயருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் எதிரே கோவில் கொண்டுள்ள ஆஞ்ச நேயருக்கு வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தது.
பின்னர், வண்ண மலர்களாலும், வெற்றிலை, வடை மாலைகள் சார்த்தப்பட்டும் சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதேபோல், நாகக்கு டையான் சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், வேட்டைக்கா ரனிருப்பு, கோவில்பத்து கிராமத்தில் இரட்டை கருடன் சன்னதி கொண்ட எனையாளும் கண்ணப்பெருமான் கோவிலில் தெற்கு முகமாக அமைந்துள்ள ஆஞ்சநே யருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Next Story