search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி கடைசி நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    பரமத்தி வேலூர் மகா மாரியம்மன், கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பேட்டை பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    ஆடி கடைசி நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் காவேரி சாலையில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காய்கனி அலங்காரமும் நடைபெற்றது .

    மேலும் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன், வேலூர் செல்லாண்டியம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பச்சையம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத கடைசி நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    Next Story
    ×