search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×