search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
    X

    பள்ளியில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

    மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

    • 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    • அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு கருத்தாளரான முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புனிதா பயிற்சி குறித்து பேசுகையில்:-

    ஆரம்ப காலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகளை அடையாளம் காண்பதன் மூலம் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் இல்லாத நிலையை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்றார். மேலும், 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து பயிற்சியில் அடையாள அட்டை முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்கத்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் தொகை, மேல் மருத்துவ அறுவை சிகிச்சை முறை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பயிற்சியில் ஆசிரிய பயிற்றுனர் சுரேஷ், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×