search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சியில்  சிறப்பு வரி வசூல் முகாம்
    X

    கோவை மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம்

    • நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
    • மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டும்.

    கோவை,

    கோவை மாநகரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் 2 நாட்கள் நடை பெற உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக நாளை (21-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (22-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளன.

    சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 56, 57-வது வார்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூர் அரசுப் பள்ளி, திருச்சி சாலை மற்றும் 24-வது வார்டுக்கு உள்பட்ட கொடிசியா சாலையில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகம்.மேற்கு மண்டலம் 35-வது வார்டுக்கு உள்பட்ட நீலியம்மன் நகர் 3-வது வீதி மற்றும் நாகாத்தம்மன் கோயில் வளாகம், 40-வது வார்டில் பொங்காளியூர் மாநகராட்சிப் பள்ளி, 34-வது வார்டில் பூம்புகார் நகர், மணி மகால் மண்டபம்.

    தெற்கு மண்டலம் 76-வது வார்டில் பாரதி சாலை, சாஸ்தா நகர், 77ஆவது வார்டில் ராம மூர்த்தி சாலை, இ.பி.காலனி, 89-வது வார்டில் பள்ளிக்கடை வீதி மாநகராட்சி வார்டு அலுவலகம்.வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உள்பட்ட காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவலகம், 19-வது வார்டு மணியகா ரன்பாளையம் அம்மா உணவ கம். மத்திய மண்டலம் 32-வது வார்டு சிறுவர் பூங்கா, ரத்தினபுரி, 63-வது வார்டு ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84-வது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தர்க்கத் இஸ்லாம் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமை மக்கள் பயன்ப டுத்தி, மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த கேட்டுக் கொள்ள ப்படுகிறது. இவ்வாறு அவர் கூற உள்ளார்.

    Next Story
    ×