என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இருந்து நாளை முதல் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    நெல்லையில் இருந்து நாளை முதல் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • நவ கைலாயங்களுக்கு நாளை மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இரவு 8 மணி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மார்கழி மாத பிறப்பையொட்டி நவ கைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நாளை ( ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நாட்களில் பாளை பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர் (செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூ மங்கலம் ஆகிய நவ கைலாயங்களுக்கு சென்றடையும்.

    இந்த பஸ்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும். ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×