search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்தி கொன்ற பட்டதாரி வாலிபரை பிடிக்க தனிப்படை: தேடுதல் வேட்டை தீவிரம்
    X

    பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்தி கொன்ற பட்டதாரி வாலிபரை பிடிக்க தனிப்படை: தேடுதல் வேட்டை தீவிரம்

    • ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
    • இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா (17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) என்பவரும் நண்பர்கள். ஆனந்த் பி.இ. படித்து விட்டு மின் துறையில் தற்கா லிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஜீவாவை ஓரின சேர்க்கைக்கு ஆனந்த் அழைத்துள்ளார். இதற்கு ஜீவா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே ஜீவா ஒரு பெண்ணுடன் பேசியதை ஆனந்த் ஸ்கிரின் ஷாட் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் தீவிரமடைந்தது. நேற்று காலை ஜீவா பள்ளிக்கு செல்ல மேல்புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பெலாந்துறை வாய்க்காலுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆனந்த, ஜீவாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

    இதில் ஜீவாவின் வயிறு, மார்பு உள்ளிட்ட 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் அலறினார் . இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை பார்த்து ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த ஜீவா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மதுபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரை கொன்று விட்டு தலைமறைவான ஆனந்தை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×