search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    கடையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்

    கடையம்:

    தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம் கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தெற்கு கடையம் கவுன்சிலர் மாரிகுமார் தலைமை தாங்கினார்.கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் கவுன்சிலருமான ஜெயக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிர காஷ்,ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், ரம்யா ராம்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    Next Story
    ×