என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் ராணுவ வீரர் திடீர் சாவு
- குரியன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
- 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் குரியன் (வயது 32). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். குரியன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் கடந்த 2 நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் குரியனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குரியனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்