search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருவிகளில் வெள்ள விபத்துக்களை தவிர்க்க  வனமுகாம்கள் அமைக்க வேண்டும்- சமூக ஆர்வலர் கோரிக்கை
    X

    குற்றாலம் அருவிகளில் வெள்ள விபத்துக்களை தவிர்க்க வனமுகாம்கள் அமைக்க வேண்டும்- சமூக ஆர்வலர் கோரிக்கை

    • கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.
    • இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    தென்காசி:

    குற்றாலம் அருவிகளில் ஏற்படும் வெள்ளத்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்க குற்றாலம் மலை ப்பகுதியில் வனமுகாம்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.

    இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அருவிக்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன முகாம்கள் அமைத்து வனத்துறையினரை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

    அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நேரங்களில் வன முகாம்களில் உள்ள வனத்துறையினர் உடனடியாக அருவிப்பகு தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இதன்மூலம் காவல்துறை யினர் துரிதமாக செயல்பட்டு அருவிப்பகுதிகளில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி விபத்துக் கள் நடைபெறாமல் தவிர்க்க லாம்.

    மேலும் அருவிப் பகுதியில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த அபாய சங்கு முறையையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×