என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
- மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
- பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊட்டி
பந்தலூர் தாலுகா பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது.
இந்த கடத்தல் மற்றும் மணல் கடத்தல்களை தடுக்கவும் பாட்டவயல், நம்பியார்குன்னு, மதுவந்தால், தாளூர், கக்குண்டி, பூலக்குன்று, கோட்டூர், மணல்வயல், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கடத்தல்களை தடுப்பது மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பந்தலூர் பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை போலீசார் நிறுத்திய போது காரை ஓட்டிவந்த ஒருவர் காரைநிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை போட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்