என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
- சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சிவகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோனார் குளம் ஓடையில் முட்புதர்களும், மரங்களும் வளர்ந்து அடர்த்தியாக நீர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைத்தொடர் காலங்களில் வெள்ளம் செல்ல முடியாத நிலையில் அடர்த்தியாகவும் காணப்படுவதால் உடனே முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
சிவகிரி:
சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர துணைச்செயலாளர் ராஜேந்திரன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, விவசாய சங்கத்தை சேர்ந்த வேல்சாமி மற்றும் பலர் பேசினர். இதில் சிவகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோனார் குளம் ஓடையில் முட்புதர்களும், மரங்களும் வளர்ந்து அடர்த்தியாக நீர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைத்தொடர் காலங்களில் வெள்ளம் செல்ல முடியாத நிலையில் அடர்த்தியாகவும் காணப்படுவதால் உடனே முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இதனைப்போன்று வடகால் கண்மாய்க்கு செல்கின்ற வடகால் ஓடையிலும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் அவற்றையும் துப்புரவு செய்ய வேண்டும் எனவும், மேலும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் போக்குவரத்துக்கும் மற்றும் வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக ரோட்டின் இருபுறங்களிலும் காணப்படும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும். சிவகிரியில் உள்ள வங்கிகளில் பணிபுரியும் மேல் அதிகாரிகள் தமிழ் தெரிந்தவர்களையே நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பேறுகால ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்