search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி அடித்துக்கொலை?
    X

    தொழிலாளி அடித்துக்கொலை?

    • தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம்-பட்ட மங்கலம் சாலையில் உள்ள ஆலமர பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திருக்கோஷ்டி யூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் நடத்திய விசா ரணையில், காட்டாம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெய மணி மகன் ஜெயகாந்தன் என தெரியவந்தது. தச்சு தொழிலாளியான இவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை.

    முகம், கைகளில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குடும்ப பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் ஜெயகாந்தன் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×