என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்
- வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாப இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கடம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் தமிழ். இவர் சம்பவத்தன்று உறவினர் கண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். வலையம்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2 பெண்கள் காயம்
சிவகங்கை அருகேயுள்ள தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உஷாதேவி. திருப்பத்தூரை சேர்ந்தவர் மகேஷ்வரி. இவர்கள் இருவரும் ஆட்டோவில் பயணம் செய்தனர். கண்டராமாணிக்கம் விலக்கு பகுதியில் ஆட்டோ வந்தபோது பின்னால் வந்த கார் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த உஷாதேவி, மகேஸ்வரி காயமடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






