search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி, தேவகோட்டையில் நாளை மின்தடை
    X

    காரைக்குடி, தேவகோட்டையில் நாளை மின்தடை

    • காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை(24-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுகநகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரிநகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி. கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப் பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி.

    கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, சாக்கவயல் துணை மின் நிலையத்தில் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர். தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் - உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம். கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர் ஆகிய 4 உயரழுத்த மின் பாதைகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பிடாவூர், குசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஆனால் மானாமதுரை சிப்காட், கொன்னக்குளம், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×