என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தளிநாதர் கோவில் தெப்பத்திருவிழா
    X

    தெப்பத்திருவிழா

    திருத்தளிநாதர் கோவில் தெப்பத்திருவிழா

    • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.
    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி சமேத திருத்தளிநாதர் சுவாமி கோவிலில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    10-வது நாளான நேற்று தெப்பத்திருவிழா விமரிசையாக நடந்தது. மழை இல்லாததால் தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததாலும், கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு பெய்த கனமழையால், சீதளி கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையொட்டி, தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலில் இருந்து சுவாமி தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    பின்னர் ஓம் நமச்சிவாயா, ஓம் சக்தி கோஷங்கள் முழங்க தெப்பத்திற்கு சுவாமிகள் கொண்டுவரப்பட்டு சோமஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், சிவகாமி அம்பாள் ஆகியோர் இணைந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்பு தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்தனர். அப்போது வான வேடிக்கைகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

    விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×