search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் சென்றவர் பலி
    X

    விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    பைக்கில் சென்றவர் பலி

    • கார் மோதி பைக்கில் சென்றவர் பலியானார்.
    • இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே பரியாமருதுபட்டி என்ற இடத்தில் பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது45) அவரது மனைவி மணிமேகலை (40) ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர் திசையில் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி தூக்கி வீசப்பட்டனர். இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் மனைவி மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து நெற்குப்பை காவல்நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×