search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுமங்கலி பூஜை
    X

    சுமங்கலி பூஜை

    • சிங்கம்புணரி பத்ரகாளி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.
    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 3-வது வார்டில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாமம் மிருத்தஞ்சய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நிறைவு பெற்று சுமங்கலி பூஜை செய்தனர். 1008 போற்றிகள் உள்ளடங்கிய லலிதா சகஸ்ரநாமம் சொல்லப்பட்டு குங்குமத்தால் ரவிக்கைத்துணி மற்றும் தேங்காய் பாலுடன் கூடிய மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.

    கணவர் நோய் நொடியின்றி வாழவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், சுமங்கலி பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×