என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
- சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.
இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்