search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென் மண்டல அளவிலான சிலம்ப போட்டி
    X

    தென் மண்டல அளவிலான சிலம்ப போட்டி

    • தென் மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை-சீதையம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் அறக்கட்டளை சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தின ராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். போட்டியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குழுக்கள் அடங்கிய மாணவ -மாணவிகள் வந்திருந்தனர்.

    தனித்திறன், குழு திறன், பொது திறன் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 3-ம் பரிசு அம்மன் சிலம்பக்கூடம் திருச்சி, 2-ம் பரிசு ஜோதி வேலு சிலம்பக் கூடம் திருச்சி, முதல் பரிசு முத்தமிழ் சிலம்ப கூடம் திருச்சி ஆகிய குழுவினர் பரிசினை பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடு களை அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் செய்திருந்தார்.

    Next Story
    ×