search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
    X

    காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

    • காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாய சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார்கோவில்

    தமிழ்நாடு விவசாய சங் கத்தின் சிவகங்கை மாவட்ட அளவிலான 27-வது மாநாடு காளையார் கோவி லில் நடைபெற்றது. மாநில விவசாய சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில் முன் னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநில விவசாய சங்க செய லாளர் மாசிலா மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கணங ணகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.

    மாநாட்டில் வழக்கறிஞர் மருது, கோபால், முருகேசன், ஆறுமுகம், மாதர் சங்கத்தின் சார்பில் பாண்டியம்மாள், மஞ்சுளா, மாவட்ட விவசாய சங்க செயலாளர் காமராஜ், சகாயம், ராஜா, பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு செல்வம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சந்தைத் திட லிலிருந்து மாநாடு திடல் வரை பேரணி நடைபெற்றது. மாநாட்டில், அதிக மக்கள் தொகை உள்ள காளையார் கோவில் ஊராட்சியை தமிழக அரசு பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்,

    தொண்டி-மதுரை ரெயில் பாதையை மத்திய அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×