search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாண்டி முனியய்யா கோவில் திருவிழா
    X

    பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

    பாண்டி முனியய்யா கோவில் திருவிழா

    • பாண்டி முனியய்யா கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சவுமிய நாராயண புரம்-சிவகங்கை சாலையில் பாண்டி முனியய்யா கோவில் உள்ளது. இங்கு 18-ம் ஆண்டு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவில் காட்டாம்பூர், தேவரம்பூர், சவுமிய நாராய ணபுரம், கல்லுவெட்டுமேடு, குறிஞ்சி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் ஆடி 1-ந் தேதி முதல் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற பால்குட விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கல்லுவெட்டுமேடு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக பாண்டிமுனியய்யா கோவில் வந்து சேர்ந்தனர்.

    பின்பு ஆலமரத்திற்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மாலை பூத்தட்டு விழாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பூத்தட்டு சுமந்து வந்து பாண்டி முனியய்யா கோவிலில் பூச்சொரிதல் நடத்தினர்.

    பின்பு கோவில் வாசலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடா வெட்டி அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பாண்டி முனியய்யா கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்

    Next Story
    ×