search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கியாஸ் கசிவால் தீ விபத்து; கட்டுமான தொழிலாளர்கள் தப்பினர்
    X

    தீ கொழுந்து விட்டு எரிவதையும், அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.

    கியாஸ் கசிவால் 'தீ' விபத்து; கட்டுமான தொழிலாளர்கள் தப்பினர்

    • திருப்பத்தூரில் கியாஸ் கசிவால் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
    • இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு மகளிர் போலீஸ் நிலையம் பின்புற பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

    நேற்று வேலை முடிந்து வந்த தொழிலாளர்கள் வீட்டின் ஒரு அறையில் இரவு நேர சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ வேகமாக அருகே இருந்த சிமெண்ட் மூடையிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.

    இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ அணைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலா ளர்கள் தீ விபத்து நடந்த சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×