search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமுறையிலான எடைக்கற்களை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    சட்டமுறையிலான எடைக்கற்களை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

    • சட்டமுறையிலான எடைக்கற்களை வணிகர்கள் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்து.

    சிவகங்கை

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகளை மீறுவதாக பெறப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்து.

    இந்த ஆய்வின்போது 19 நிறுவனங்களில் சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகள்-2011ன் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 4 நிறுவனங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்களில் அதிகபட்ச சில்லரை விலை தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மாதம், வருடம், நுகர்வோர் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் இல்லாத காரணத்தினால், நிறுவன உரிமையாளர்கள் மீது குற்ற இசைவுத்தீர்வு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    எனவே, கடைநிறு வனங்களில் விற்கப்படும் பொட்டலப்பொருட்களில் மேற்கண்ட விவரங்களுடன் விற்பனை செய்யுமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும், சட்டமுறை எடையளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி, வணிகர்களால் பயன்படுத்தப்படும் மின்னனு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் பிற மேசை தராசுகள், விட்டத் தராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து, அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

    அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடையளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×