என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
    X

    காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கர்ப்பிணி பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

    • காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • இந்த ஆய்வின் போது இணை இயக்குநர், தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வருகை பதிவேட்டில் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை, குழந்தை களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற வந்துள்ள பொது மக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    மகப்பேறு பகுதியில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வெளிநோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 1200 பேருக்கும், உள்நோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 600 பேருக்கும், பிரசவிக்கும் தாய்மார்கள் மாதம்தோறும் 300 முதல் 400 பேருக்கும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்கள் மாதம்தோறும் 100 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் சிசு பராமரிப்பு பகுதியில் மாதம்தோறும் 300 வெளி நோயாளி குழந்தைகளுக்கும், 150 உள்நோயாளி குழந்தை களுக்கும் சிகிச்சை அளிக்க ப்படுகிறது.

    பொது வெளி நோயாளி கள் பிரிவில் மாதம்தோறும் 20 ஆயிரம் பேருக்கும், விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவின் கீழ் மாதம்தோறும் 200 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் மாதம்தோறும் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அகற்றும் சிகிச்சை, பித்தப்பை கல் அடைப்பு அகற்றுதல், கர்ப்பவாய் பரிசோதனை நுண்துளைகள் அறுவை சிகிச்சையும் நடைபெறு கிறது.

    தொற்றுநோய் பிரிவு, மனநலபிரிவு, செவி திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மற்றும் இதர நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் வலதுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கமாக கலெக்டர் மரம் நடும் பணியை தொடங்கிவைத்தார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர், வட்டாச்சியர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.

    Next Story
    ×