search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவ சப்பரம் பவனி
    X

    நெற்குப்பையில் கிறிஸ்தவ சப்பரம் பவனி திருவிழா.

    கிறிஸ்தவ சப்பரம் பவனி

    • கிறிஸ்தவ சப்பரம் பவனி திருவிழா நடந்தது.
    • 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் வருடம் தோறும் சப்பரம் என்னும் தேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி பங்குத்தந்தையால் தேவாலயத்தில் ஜெப நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான மேல கச்சேரி தெரு, பொன்னமராவதி சாலை, ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சப்பரம் வலம் வந்தது.

    சப்பரத்தை சாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமுழுக்கு யோவான் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×