என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எருமை மாடு, ஆடுகள் பலியிட்டு நரிக்குறவர்கள் வினோத வழிபாடு
- எருமை மாடு, ஆடுகள் பலியிட்டு நரிக்குறவர்கள் வினோத வழிபாடு நடந்தது.
- 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட் டன.
சிவகங்கை
சிவகங்கை அருகே பழ மலைநகரில் நரிக்குறவ மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய் வத்திற்கு, எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தி–னர். அப்போது 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் குல தெய்வத்திற்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி, பூஜை செய்து வரு–கிறோம். இங்கு பூஜைகள் நடத்தும் போது வெளியூர்க–ளில் உள்ள எங்கள் உறவி–னர்கள் கலந்து கொண்டு குலதெய்வம் காளியம்ம–னுக்கு எருமை கிடாவையும், துர்கையம்மனுக்கு ஆட்டுக் கிடாவையும் பலியிட்டு பூஜை செய்வார்கள்.
மேலும் இதற்காக, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டு கிடாக்க–ளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளையும் வாங்கியுள்ளோம். இன்று அதிகாலையில் கிடா வெட்டி, ரத்தத்தை குடித்து காளியம்மனுக்கு படையல் வைத்தும், தொடர்ந்து ரவை ரொட்டிகளை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்க–ளாக இங்கே பூஜைகள் செய்து வருகிறோம்.
பூஜைக்குப் பின் எருமை மாடுகளை உரித்து, உடல் உறுப்புகளை, உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் செல் வோம். எருமையின் தலையை எதற்கும் பயன்ப–டுத்த மாட்டோம். மிஞ்சும் பாகங்களை உலர்த்தி பயன் படுத்திக் கொள்வோம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்க–ளின் உறவினர்கள் உள்ள–னர். வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கிடா வெட்டி காளி–யம்மனுக்கு பூஜைகள் செய்து வருறோம். இந்த பூஜையில் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குலதெய்வத்தை வழிபட் டால் நோய் நொடியின்றியும், ஊசி மணி பாசி தொழிலும் சிறப்பாக அமையும் என்பது நீண்ட கால நம்பிக்கை என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்