search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டை மாணவர் மாநில கேரம் போட்டிக்கு தேர்வு
    X

    மாணவர் தாமோதரன்

    அருப்புக்கோட்டை மாணவர் மாநில கேரம் போட்டிக்கு தேர்வு

    • தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது.

    அருப்புக்கோட்டை

    தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் சார்பில் திண்டுக்கல்லில் 3-வது மாநில அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ், கவுன்சில் ஆப் இந்தியா இணைந்து நடத்தியது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் தாமோதரன் கலந்து கொண்டு கேரம் ஒற்றையர் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

    இதைத்தொடர்ந்து அவர் இந்த மாத இறுதியில் கோவாவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற தாமோதரன் மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சவுந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×