search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
    X

    மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மதி அங்காடி விற்பனை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், கீழடி ஆகிய இடங்க ளில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட் களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி – விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக் கப்பட உள்ளது. அவ் விற்பனை மையம் அமைந் துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக் குழு, கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப் பாவது பெற்று இருத்தல் வேண்டும்.

    அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங் காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுய உதவிக் குழு, கூட்டமைப் பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப் படும்.

    பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு 04575 240962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×