search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் நெய் விளக்கு ஏற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வழிபாடு
    X

    கோவிலில் நெய் விளக்கு ஏற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வழிபாடு

    • சிவகங்கையில் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வழிபாடு செய்தனர்.
    • எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

    சிவகங்கை

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த தீர்ப்பையொட்டி கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், கோபி, சேவியர், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×