என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடநதது.
- கூட்டுறவு சங்க தலைவர் சங்கர ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்-பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆலோசனை வழங்கினார். புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டிபன்அருள்சாமி,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர்கள் சதீஸ், மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் குழந்தை, கூட்டுறவு சங்க தலைவர் சங்கர ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






