என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    சிவகங்கையில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழகத்தில் நடை பெறும் பாலியல் வன்முறை காவல்நிலைய மரணங்கள், போதை பொருட்கள் விற்பனை, மக்களை வஞ்சிக்கும் சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், அவை தலைவர் நாகராஜன் நகர் செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். குண சேகரன், நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டிபன், கோபி, சேவியர், ஸிதர், பாரதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மேலும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×